பல்லடம் பேருந்து நிலையத்தில் குடிமகன் போதையில் அட்டகாசம் - தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

பல்லடம் பேருந்து நிலையத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்லும் பேருந்து நிலையம் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என காவல்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மாலை நேரங்களில் கல்லூரி மற்றும் பணிக்கு செல்லும் பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் பேருந்துக்காக வந்து செல்கின்றனர்.



இந்நிலையில் பேருந்து நிலையத்திற்கு எதிரே அரசு மதுபான கடை அமைந்துள்ளதால் நாளுக்கு நாள் குடிமகன்களின் அட்டகாசமும் அதிகரித்து வருகிறது.



இந்நிலையில், நேற்று இரவு 9 மணி அளவில் குடிபோதையில் தலைகால் தெரியாமல் வந்த நபர் ஒருவர், அங்கிருந்த பொதுமக்களை ஆபாச வார்த்தைகளில் பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.



குடிபோதையில் இருந்த நபரை வீட்டுக்கு கிளம்புமாறு பொதுமக்கள் அறிவுறுத்தியும் அந்த நபர் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், குடிபோதையில் இருந்தவரை சரமாரியாக தாக்கினர். அதில் மயக்கமடைந்த நபரை சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

பேருந்து நிலையத்திற்கு எதிரே குடிமகன்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் பல்லடம் காவல்துறையினர் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...