உடுமலை அடுத்த சின்ன வீரம்பட்டியில் மே தினத்தையொட்டி ஊராட்சி தலைவர் கலாவதி பழனிச்சாமி தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில், செல்வி கேஸ் உரிமையாளர் அய்யப்பன், கலந்து கொண்டு பொதுமக்கள் எரிவாயு பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருப்பூர்: உடுமலை அடுத்த சின்னவீரன்பட்டியில் மே தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் எரிவாயு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் சின்ன வீரம்பட்டியில் மே தினத்தை ஒட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. சின்ன வீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளியில் ஊராட்சி தலைவர் கலாவதி பழனிச்சாமி தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
இந்த கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் வணிகத்தினை உறுதி செய்வது, கிராம வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், ஜல் ஜீவன் மிஷன் இயக்கம் உள்ளிட்டவை குறித்த தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டது.

இதில் உடுமலை பாரத் கேஸ் விநியோகஸ்தரான செல்வி கேஸ் ஏஜென்சி உரிமையாளர் அய்யப்பன், கலந்து கொண்டு பொதுமக்கள் எரிவாயு பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

எரிவாயுவை எவ்வாறு பயன்படுத்துவது, எரிவாயு சிக்கனம் மற்றும் எரிவாயுவை பாதுகாப்பாக கையாளுவது குறித்த வழிமுறைகள் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் சின்ன வீரம்பட்டியில் மே தினத்தை ஒட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. சின்ன வீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளியில் ஊராட்சி தலைவர் கலாவதி பழனிச்சாமி தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
இந்த கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் வணிகத்தினை உறுதி செய்வது, கிராம வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், ஜல் ஜீவன் மிஷன் இயக்கம் உள்ளிட்டவை குறித்த தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டது.
இதில் உடுமலை பாரத் கேஸ் விநியோகஸ்தரான செல்வி கேஸ் ஏஜென்சி உரிமையாளர் அய்யப்பன், கலந்து கொண்டு பொதுமக்கள் எரிவாயு பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
எரிவாயுவை எவ்வாறு பயன்படுத்துவது, எரிவாயு சிக்கனம் மற்றும் எரிவாயுவை பாதுகாப்பாக கையாளுவது குறித்த வழிமுறைகள் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.