உடுமலை அருகே சின்னவீரன்பட்டி கிராமசபை கூட்டத்தில் எரிவாயு குறித்து விழிப்புணர்வு!

உடுமலை அடுத்த சின்ன வீரம்பட்டியில் மே தினத்தையொட்டி ஊராட்சி தலைவர் கலாவதி பழனிச்சாமி தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில், செல்வி கேஸ் உரிமையாளர் அய்யப்பன், கலந்து கொண்டு பொதுமக்கள் எரிவாயு பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


திருப்பூர்: உடுமலை அடுத்த சின்னவீரன்பட்டியில் மே தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் எரிவாயு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் சின்ன வீரம்பட்டியில் மே தினத்தை ஒட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. சின்ன வீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளியில் ஊராட்சி தலைவர் கலாவதி பழனிச்சாமி தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

இந்த கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் வணிகத்தினை உறுதி செய்வது, கிராம வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், ஜல் ஜீவன் மிஷன் இயக்கம் உள்ளிட்டவை குறித்த தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டது.



இதில் உடுமலை பாரத் கேஸ் விநியோகஸ்தரான செல்வி கேஸ் ஏஜென்சி உரிமையாளர் அய்யப்பன், கலந்து கொண்டு பொதுமக்கள் எரிவாயு பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.



எரிவாயுவை எவ்வாறு பயன்படுத்துவது, எரிவாயு சிக்கனம் மற்றும் எரிவாயுவை பாதுகாப்பாக கையாளுவது குறித்த வழிமுறைகள் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...