கோவை ஆலாந்துறை அருகே இரு சக்கர வாகனத்தில் கஞ்சாவை கடத்திச் சென்ற திருப்பூரை சேர்ந்த பிரசாந்த் எனும் இளைஞரை போலீசார் கைது செய்தனர். இளைஞர்களை குறிவைத்து அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை: கோவை மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை, கடத்தலை தடுக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆலாந்துறை தனிப்படை போலீசார் காளியமங்கலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கே இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவரை நிறுத்தி அவரது வாகனத்தை போலீசார் சோதனையிட்டனர். அப்போது, உள்ளே சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.அதில்,பிடிபட்ட நபர் திருப்பூர் மாவட்டத்தைசேர்ந்த நடராஜ் என்பவரின் மகன் பிரசாந்த் (வயது24) என்பதும், அவர் இளைஞர்களை குறிவைத்து ஆலாந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, பிரசாந்தை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 1.150 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். கைதான பிரசாந்தை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், ஆலாந்துறை தனிப்படை போலீசார் காளியமங்கலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கே இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவரை நிறுத்தி அவரது வாகனத்தை போலீசார் சோதனையிட்டனர். அப்போது, உள்ளே சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.அதில்,பிடிபட்ட நபர் திருப்பூர் மாவட்டத்தைசேர்ந்த நடராஜ் என்பவரின் மகன் பிரசாந்த் (வயது24) என்பதும், அவர் இளைஞர்களை குறிவைத்து ஆலாந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, பிரசாந்தை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 1.150 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். கைதான பிரசாந்தை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.