கோவை அருகே போதைப்பொருள் விற்க முயற்சி - திருப்பூர் இளைஞர் கைது

கோவை ஆலாந்துறை அருகே இரு சக்கர வாகனத்தில் கஞ்சாவை கடத்திச் சென்ற திருப்பூரை சேர்ந்த பிரசாந்த் எனும் இளைஞரை போலீசார் கைது செய்தனர். இளைஞர்களை குறிவைத்து அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோவை: கோவை மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை, கடத்தலை தடுக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆலாந்துறை தனிப்படை போலீசார் காளியமங்கலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கே இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவரை நிறுத்தி அவரது வாகனத்தை போலீசார் சோதனையிட்டனர். அப்போது, உள்ளே சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா இருந்தது தெரியவந்தது.



இதையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.அதில்,பிடிபட்ட நபர் திருப்பூர் மாவட்டத்தைசேர்ந்த நடராஜ் என்பவரின் மகன் பிரசாந்த் (வயது24) என்பதும், அவர் இளைஞர்களை குறிவைத்து ஆலாந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, பிரசாந்தை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 1.150 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். கைதான பிரசாந்தை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...