கோவை மாவட்டம் வால்பாறையில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுநர் காளிதாஸ் மற்றும் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நோயாளி சிவகுமார் இருவரும் உயிரிழந்தனர்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு மருத்துவமனைக்கு பாரளை எஸ்டேட் பகுதியில் இருந்து சிவகுமார் என்பவரை சிகிச்சைக்காக 108 வாகனத்தின் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவமனை சாலை பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்ல வாகனத்தின் பின்புறம் கதவை திறக்க ஓட்டுநர் காளிதாஸ் இறங்கி உள்ளார். அப்போது, வாகனம் பிரேக் பிடிக்காமல் பின்புறமாக வந்து பள்ளத்தில் விழுந்து விபக்குள்ளானது.
இதில், ஓட்டுநர் காளிதாஸ் மேல் ஆம்புலன்ஸ் வாகனம் ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நோயாளி சிவக்குமார் வாகனத்தின் அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
நோயாளி சிவக்குமாரின் மனைவி சாந்திக்கு பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 108 ஆம்புலன்ஸ் வாகனம் விபத்துக்குள்ளாகி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.