வால்பாறையில் 108 ஆம்புலன்ஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - ஓட்டுநர், நோயாளி பலி

கோவை மாவட்டம் வால்பாறையில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுநர் காளிதாஸ் மற்றும் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நோயாளி சிவகுமார் இருவரும் உயிரிழந்தனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு மருத்துவமனைக்கு பாரளை எஸ்டேட் பகுதியில் இருந்து சிவகுமார் என்பவரை சிகிச்சைக்காக 108 வாகனத்தின் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனை சாலை பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்ல வாகனத்தின் பின்புறம் கதவை திறக்க ஓட்டுநர் காளிதாஸ் இறங்கி உள்ளார். அப்போது, வாகனம் பிரேக் பிடிக்காமல் பின்புறமாக வந்து பள்ளத்தில் விழுந்து விபக்குள்ளானது.



இதில், ஓட்டுநர் காளிதாஸ் மேல் ஆம்புலன்ஸ் வாகனம் ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



நோயாளி சிவக்குமார் வாகனத்தின் அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.



நோயாளி சிவக்குமாரின் மனைவி சாந்திக்கு பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 108 ஆம்புலன்ஸ் வாகனம் விபத்துக்குள்ளாகி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...