உடுமலை சீனிவாசா வீதியில் பேங்க் ஆப் இந்தியா வங்கி எதிர்புறம் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்திற்குள் சென்ற மர்மநபர் ஒருவர் செல்போன் திருட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றது.
திருப்பூர்: உடுமலையில் பட்டப்பகலில் செல்போன் திருடும் வீடியோ வைரலாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை சீனிவாசா வீதியில் பேங்க் ஆப் இந்தியா வங்கி எதிர்புறம் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்திற்குள் சென்ற மர்மநபர் ஒருவர் செல்போன் திருட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றது.
அந்த வீடியோவில் தெரியும் நபரை யாரேனும் பார்த்தால் உடனே காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உடுமலையில் கடந்த சில நாட்களாகவே திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ள காரணத்தால், வெளியூர் செல்லும் நபர்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து விட்டு செல்லவும், கண்காணிப்பு கேமராக்கள் முறையாக அமைக்கப்பட வேண்டும் என காவல்துறை சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.