கோவை மாநகராட்சியில் நடைபெற்ற குறைதீர்ப்புக் கூட்டத்தில் 97வது வார்டு பகுதிக்குட்பட்ட பழங்குடியின மக்கள் மனு அளித்தனர். அதில், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.
கோவை: கோவை மாநகராட்சியின் குறைதீர்ப்புக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி வார்டு எண்.97க்கு உட்பட்ட குறிச்சி, கொண்டி நகர் பகுதியைச் சேர்ந்த ஆண்ட்ரூ என்பவர் மக்கள் நீதிமய்யம் சார்பில் மனு ஒன்றை அளித்தார்.

அதில்,2000க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில், 40 கழிப்பறைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளதாகவும், குப்பைகளைக் கொட்டபோதிய குப்பை தொட்டிகள் இல்லை எனவும் குற்றச்சாட்டியிருந்தார்.

மேலும், குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றிலும் கழிவுகள் முறையாக அகற்றப்படாததால் தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கழிவுநீர் கால்வாய்களும் இதுவரை அப்பகுதியில் அமைக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தப் பகுதியில் நகர்ப்புற சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையம் அமைப்பதற்கான திட்டமிடல்கள் நடைபெற்றுவருகிறது.

இந்தப் பணிகளைத் தொடங்கும் முன் இப்பகுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவு செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட மாநகராட்சி ஆணையர், கோரிக்கை தொடர்பாக, அப்பகுதியில் மாநகராட்சி குழு ஆய்வு நடத்திஉரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
மேலும், நகர்ப்புற சுகாதார மையத்தின் கட்டுமானத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை குடியிருப்பாளர்கள் ஒரு வழித்தடமாக மாற்றியிருப்பதாகவும் மாநகராட்சி ஆணையர் அப்போது தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி வார்டு எண்.97க்கு உட்பட்ட குறிச்சி, கொண்டி நகர் பகுதியைச் சேர்ந்த ஆண்ட்ரூ என்பவர் மக்கள் நீதிமய்யம் சார்பில் மனு ஒன்றை அளித்தார்.
அதில்,2000க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில், 40 கழிப்பறைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளதாகவும், குப்பைகளைக் கொட்டபோதிய குப்பை தொட்டிகள் இல்லை எனவும் குற்றச்சாட்டியிருந்தார்.
மேலும், குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றிலும் கழிவுகள் முறையாக அகற்றப்படாததால் தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கழிவுநீர் கால்வாய்களும் இதுவரை அப்பகுதியில் அமைக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தப் பகுதியில் நகர்ப்புற சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையம் அமைப்பதற்கான திட்டமிடல்கள் நடைபெற்றுவருகிறது.
இந்தப் பணிகளைத் தொடங்கும் முன் இப்பகுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவு செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட மாநகராட்சி ஆணையர், கோரிக்கை தொடர்பாக, அப்பகுதியில் மாநகராட்சி குழு ஆய்வு நடத்திஉரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
மேலும், நகர்ப்புற சுகாதார மையத்தின் கட்டுமானத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை குடியிருப்பாளர்கள் ஒரு வழித்தடமாக மாற்றியிருப்பதாகவும் மாநகராட்சி ஆணையர் அப்போது தெரிவித்தார்.