கழிவறை வசதி கோரும் பழங்குடியின மக்கள் - கோவை மாநகராட்சி குறைதீர்ப்புக்கூட்டத்தில் மனு!

கோவை மாநகராட்சியில் நடைபெற்ற குறைதீர்ப்புக் கூட்டத்தில் 97வது வார்டு பகுதிக்குட்பட்ட பழங்குடியின மக்கள் மனு அளித்தனர். அதில், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.


கோவை: கோவை மாநகராட்சியின் குறைதீர்ப்புக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி வார்டு எண்.97க்கு உட்பட்ட குறிச்சி, கொண்டி நகர் பகுதியைச் சேர்ந்த ஆண்ட்ரூ என்பவர் மக்கள் நீதிமய்யம் சார்பில் மனு ஒன்றை அளித்தார்.



அதில்,2000க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில், 40 கழிப்பறைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளதாகவும், குப்பைகளைக் கொட்டபோதிய குப்பை தொட்டிகள் இல்லை எனவும் குற்றச்சாட்டியிருந்தார்.



மேலும், குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றிலும் கழிவுகள் முறையாக அகற்றப்படாததால் தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கழிவுநீர் கால்வாய்களும் இதுவரை அப்பகுதியில் அமைக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தப் பகுதியில் நகர்ப்புற சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையம் அமைப்பதற்கான திட்டமிடல்கள் நடைபெற்றுவருகிறது.



இந்தப் பணிகளைத் தொடங்கும் முன் இப்பகுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவு செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மனுவைப் பெற்றுக்கொண்ட மாநகராட்சி ஆணையர், கோரிக்கை தொடர்பாக, அப்பகுதியில் மாநகராட்சி குழு ஆய்வு நடத்திஉரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

மேலும், நகர்ப்புற சுகாதார மையத்தின் கட்டுமானத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை குடியிருப்பாளர்கள் ஒரு வழித்தடமாக மாற்றியிருப்பதாகவும் மாநகராட்சி ஆணையர் அப்போது தெரிவித்தார்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...