தமிழகத்தில் 76 லட்சம் குழந்தைகளுக்கு ரூபெல்லா ஊசி போடப்பட்டுள்ளதாக சுகாதார துறை தடுப்பு ஊசி பிரிவு துணை இயக்குநர் தகவல்


தமிழகத்தில் 76 லட்சம் குழந்தைகளுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார துறை தடுப்பு ஊசி பிரிவு துணை இயக்குநர் தாமரை செல்வி தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார துறை தடுப்பு ஊசி பிரிவு துணை இயக்குநர் தாமரை செல்வி கூறுகையில், தமிழகத்தில் 9 மாதங்கள் முதல் 15 வயது வரையுள்ள 1 கோடியே 76 லட்சம் குழந்தைகளில், தற்போது வரை 76 லட்சம் குழந்தைகளுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும், மீதமுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வருகின்ற மார்ச் 1 முதல் 14 ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி பாதுகாப்பானது, அதுகுறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். தொடர்ந்து, தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...