தமிழகத்தில் 76 லட்சம் குழந்தைகளுக்கு ரூபெல்லா ஊசி போடப்பட்டுள்ளதாக சுகாதார துறை தடுப்பு ஊசி பிரிவு துணை இயக்குநர் தகவல்


தமிழகத்தில் 76 லட்சம் குழந்தைகளுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார துறை தடுப்பு ஊசி பிரிவு துணை இயக்குநர் தாமரை செல்வி தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார துறை தடுப்பு ஊசி பிரிவு துணை இயக்குநர் தாமரை செல்வி கூறுகையில், தமிழகத்தில் 9 மாதங்கள் முதல் 15 வயது வரையுள்ள 1 கோடியே 76 லட்சம் குழந்தைகளில், தற்போது வரை 76 லட்சம் குழந்தைகளுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும், மீதமுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வருகின்ற மார்ச் 1 முதல் 14 ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி பாதுகாப்பானது, அதுகுறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். தொடர்ந்து, தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...