உதகை - கேத்தி இடையே சிறப்பு மலை ரயில் சேவை! - சுற்றுலா பயணிகள் வரவேற்பு

கோடை சீசனுக்காக உதகையிலிருந்து கேத்தி ரயில் நிலையம் இடையே சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில், உதகை ரயில் நிலையத்திலிருந்து காலை 9.45 மணி, 11.30 மணி மாலை 3 மணி என வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கேத்தி வரை இயக்கப்படுகிறது.



நீலகிரி: மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள், யுனெஸ்கோ அந்தஸ்துபெற்ற பாரம்பரிய நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இதனால், தினந்தோறும் மேட்டுபாளையம் - குன்னூர் - உதகை இடையே மலை ரயில் இயக்கபட்டு வருகிறது. அதேபோல உதகை - குன்னூர் இடையிலும் மலை ரயில் சேவை செயல்பட்டுவருகிறது.



இந்த நிலையில், தற்போது கோடை சீசன் தொடங்கி உள்ளதை அடுத்து நீலகிரி மாவட்டத்திற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கி உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுவதால், வழக்கமாக இயக்கப்படும் மலை ரயிலில் இடம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.



இதனையடுத்து, கோடை சீசனுக்காக உதகையிலிருந்து கேத்தி ரயில் நிலையம் இடையே சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. உதகை ரயில் நிலையத்திலிருந்து காலை 9.45 மணி, 11.30 மணி மாலை 3 மணி என வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் இந்த மலை ரயில் கேத்தி வரை இயக்கப்படுகிறது.



உதகையிலிருந்து கேத்தி சென்று மீண்டும் உதகைக்கு சுற்றுலா பயணிகள் அழைத்து வரப்படுவார்கள். முதல் வகுப்பில் பயணம் செய்ய தலா 630 ரூபாயும், 2-ஆம் வகுப்பில் பயணம் செய்ய தலா 465 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுவதுடன் சிறப்பு சிற்றுண்டியும் வழங்கப்படுகிறது.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...