திருப்பூர் சிட்கோ பகுதியை சேர்ந்த 7 சிறுவர்கள் விடுமுறை காரணமாக நொய்யல் ஆற்றில் குளிக்க சென்ற போது, சந்துரு(12) மற்றும் இனியன்(10) என்ற 2 சிறுவர்கள் ஆழத்திற்கு சென்று குளித்த போது சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் அருகே நொய்யல் ஆற்றில் குளிக்க சென்ற இரண்டு பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தொடர் விடுமுறை காரணமாக திருப்பூர் சிட்கோ அருகேயுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்கள் திருப்பூரில் உள்ள நொய்யல் ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

இதில் சிட்கோ அக்ரஹாரம் வீதியைச் சேர்ந்த சந்துரு(12) மற்றும் எம். எஸ். நகரை சேர்ந்த இனியன் (10) உள்பட 7 மாணவர்கள் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.
தண்ணீர் குறைவாக இருந்ததால், மாணவர்கள் சந்துரு மற்றும் இனியன் ஆழமான இடத்திற்கு சென்று குளித்துள்ளனர். அப்போது இருவரும் சேற்றில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
நீச்சல் தெரியாத காரணத்தால் இருவரும் சேற்றில் இருந்து வெளியே வரமுடியாமல், நீரில் மூழ்கியுள்ளனர். அப்போது, மற்ற மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் 5 மாணவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கியது தொடர்பாக ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த ஊத்துக்குளி போலீசார் உயிரிழந்த 2 பள்ளி மாணவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே பகுதியை சேர்ந்த இரண்டு பள்ளி மாணவர்கள் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
தொடர் விடுமுறை காரணமாக திருப்பூர் சிட்கோ அருகேயுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்கள் திருப்பூரில் உள்ள நொய்யல் ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.
இதில் சிட்கோ அக்ரஹாரம் வீதியைச் சேர்ந்த சந்துரு(12) மற்றும் எம். எஸ். நகரை சேர்ந்த இனியன் (10) உள்பட 7 மாணவர்கள் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.
தண்ணீர் குறைவாக இருந்ததால், மாணவர்கள் சந்துரு மற்றும் இனியன் ஆழமான இடத்திற்கு சென்று குளித்துள்ளனர். அப்போது இருவரும் சேற்றில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
நீச்சல் தெரியாத காரணத்தால் இருவரும் சேற்றில் இருந்து வெளியே வரமுடியாமல், நீரில் மூழ்கியுள்ளனர். அப்போது, மற்ற மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் 5 மாணவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கியது தொடர்பாக ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த ஊத்துக்குளி போலீசார் உயிரிழந்த 2 பள்ளி மாணவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே பகுதியை சேர்ந்த இரண்டு பள்ளி மாணவர்கள் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது