எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவை விட அண்ணாமலை பெரிய ஆளுமையில்லை..! - ஆர்எஸ் பாரதி விமர்சனம்

திமுக சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கான ஆதாரங்களை இன்னும் 15 நாட்களுக்கு சமர்பிக்கவில்லை என்றால் வழக்குத் தொடரப்படும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.


சென்னை: திமுக வாங்கி குவித்துள்ளதாக பட்டியல் வெளியிட்டுள்ள பாஜக மாநில தலைவர் ஆதாரங்களை காட்டவில்லை என்றால் வழக்கு தொடரப்படும் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு ரூ.50 ஆயிரத்து 219 கோடி, அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ரூ.5,442.39 கோடி, அமைச்சர் உதயநிதிக்கு ரூ.2,039 கோடி, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ரூ.1,023.22 கோடி, மைச்சர் கே.என்.நேருவுக்கு ரூ.2,495.14 கோடி, எம்.பி. கனிமொழிக்கு ரூ.830.33 கோடி, கலாநிதிமாறனுக்கு ரூ.12,450 கோடி, டி.ஆர்.பாலுவுக்கு ரூ.10,841.10 கோடி, அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்கு ரூ.579.58 கோடி, கலாநிதி வீராசாமிக்கு ரூ.2,923.29 கோடி, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது கவுதம் சிகாமணிக்கு ரூ.581.20 கோடி என சொத்துக்கள் உள்ளதாகவும் அதற்கான ஆதாரங்கள் இவை என்றும் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.



இதைத் தொடர்ந்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

திமுகவினரின் சொத்து பட்டியலுக்கு அண்ணாமலை ஆதாரம் தர வேண்டும். இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

அண்ணாமலை மீது திமுகவினர் தனித்தனியாக வழக்கு போடுவார்கள். ஜூனில் அவர் பாத யாத்திரை போக மாட்டார். கோர்ட் கோர்ட்டாக தான் போவார் என்றார்.

திமுக சார்பில், திமுகவிற்கு ரூ.1408.9 சொத்துள்ளதாகவும், திமுகவிற்கு ரூ.3418 கோடியில் உள்ளதாகவும், அதேபோல் திமுக சார்பில் கல்லூரி மற்றும் பல்கலை கழகங்கள் ரூ.34,184.71 கோடியில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவற்றிற்கான சொத்துப் பத்திரங்கள் மற்றும் ஆதாரங்களை இன்னும் 15நாட்களுக்குள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அண்ணா அறிவாலயத்திற்கு வந்து அமைப்புச் செயலாளரான என்னிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லை என்றால் வழக்கு தொடரப்படும்.

இவ்வாறு ஆர்.எஸ் பாரதி தெரிவித்தார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...