உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா - உடலில் கத்திபோட்டு பக்தர்கள் நூதன வழிபாடு!

உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நாளை நடைபெறவுள்ள நிலையில், இன்று தேவாங்கர் சமூக நல மன்றம் சார்பில் ஏராளமான பக்தர்கள் உடம்பில் கத்தி போட்டு ரத்தம் சொட்ட சொட்ட நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள், உடம்பில் கத்தி போட்டு ரத்தம் சொட்ட சொட்ட நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த மார்ச் 28ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது.

இதனையடுத்து ஏப்ரல் 4ஆம் தேதி கம்பம் போடுதல் மற்றும் கொடி கொடியேற்றம் பூவோடு எடுத்தல் என தினமும் பல்வேறு அலங்கார ஊர்திகளில் அம்மன் ஊர்வலம் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளைய தினம் நடைபெற உள்ளது இந்நிலையில் இன்று தேவாங்கர் சமூக நல மன்றம் சார்பாக உடம்பில் கத்திபோட்டு நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர்.



பசுபதி வீதி பகுதியில் துவங்கிய ஊர்வலம் தளி ரோடு, தங்கம்மாள் ஓடை, கொல்லம் பட்டறை வழியாக மாரியம்மன் கோவிலில் நிறைவடைந்தது.



மேலும் இந்த கத்தி போடும் நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு மேள தாள வாத்தியங்கள் முழுங்க தீர்த்தக் குடம் எடுத்து ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...