உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நாளை நடைபெறவுள்ள நிலையில், இன்று தேவாங்கர் சமூக நல மன்றம் சார்பில் ஏராளமான பக்தர்கள் உடம்பில் கத்தி போட்டு ரத்தம் சொட்ட சொட்ட நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள், உடம்பில் கத்தி போட்டு ரத்தம் சொட்ட சொட்ட நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த மார்ச் 28ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது.
இதனையடுத்து ஏப்ரல் 4ஆம் தேதி கம்பம் போடுதல் மற்றும் கொடி கொடியேற்றம் பூவோடு எடுத்தல் என தினமும் பல்வேறு அலங்கார ஊர்திகளில் அம்மன் ஊர்வலம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளைய தினம் நடைபெற உள்ளது இந்நிலையில் இன்று தேவாங்கர் சமூக நல மன்றம் சார்பாக உடம்பில் கத்திபோட்டு நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர்.

பசுபதி வீதி பகுதியில் துவங்கிய ஊர்வலம் தளி ரோடு, தங்கம்மாள் ஓடை, கொல்லம் பட்டறை வழியாக மாரியம்மன் கோவிலில் நிறைவடைந்தது.

மேலும் இந்த கத்தி போடும் நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு மேள தாள வாத்தியங்கள் முழுங்க தீர்த்தக் குடம் எடுத்து ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த மார்ச் 28ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது.
இதனையடுத்து ஏப்ரல் 4ஆம் தேதி கம்பம் போடுதல் மற்றும் கொடி கொடியேற்றம் பூவோடு எடுத்தல் என தினமும் பல்வேறு அலங்கார ஊர்திகளில் அம்மன் ஊர்வலம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளைய தினம் நடைபெற உள்ளது இந்நிலையில் இன்று தேவாங்கர் சமூக நல மன்றம் சார்பாக உடம்பில் கத்திபோட்டு நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர்.
பசுபதி வீதி பகுதியில் துவங்கிய ஊர்வலம் தளி ரோடு, தங்கம்மாள் ஓடை, கொல்லம் பட்டறை வழியாக மாரியம்மன் கோவிலில் நிறைவடைந்தது.
மேலும் இந்த கத்தி போடும் நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு மேள தாள வாத்தியங்கள் முழுங்க தீர்த்தக் குடம் எடுத்து ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.