தமிழகத்தில் பசுமை பரப்பளவை அதிகரிக்க வலியுறுத்தும் வகையில் தனியார் கல்லூரி மாணவிகள் சென்னை வரை மேற்கொண்ட இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கோவையில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.
கோவை: தமிழகத்தில் பசுமை பரப்பளவு அடர்த்தி குறைவாக உள்ளது என்ற புள்ளி விவரங்கள் வெளியான நிலையில், இயற்கை சூழலை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவையை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவிகள் இணைந்து மரங்களை வளர்க்க வேண்டும், சுற்று சூழலை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தும் வகையில் கோவையில் இருந்து சென்னை வரை இரு சக்கர வாகனத்தில் செல்லும் விழிப்புணர்வு பேரணியை முன்னெடுத்துள்ளனர்.
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணியை, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவங்கி வைத்தார். இன்று துவங்கிய பேரணி நாளை இரவு சென்னையில் நிறைவடைய உள்ளது. செல்லும் வழியில் உள்ள காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பிகளையும் சந்தித்து விழிப்புணர்வு குறித்து தெரிவித்து செல்கின்றனர்.
இதேபோல கிராமங்களில் மரங்கள் வளர்ப்பு குறித்தும் மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளனர்.