வால்பாறையில் சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தததால், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் என அனைவரும் அவதிப்பட்டனர். இந்நிலையில் வால்பாறையில் திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கோவை: வால்பாறையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழையால் வெப்பம் தணிந்து பூமி குளிர்ச்சி அடைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. வெயில் தாக்கத்தால் சுற்றுலாப் பயணிகள் பொதுமக்கள் அவதிப்பட்டனர். வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியில் திடீர் தீ பிடித்து எரிந்து வந்தது.
இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளும், வெயில் தாக்கத்தால் சிரமப்பட்டனர்.
இன்று திடீரென வால்பாறை, சின்னக்கல்லார், அக்காமலை, கருமலை, சோலையார் அணை, முடீஸ் பச்சைமலை, பெரிய கல்லார், போன்ற பகுதிகளில் மழை பெய்தது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழையினால் வெப்பம் தணிந்து பூமி குளிர்ச்சி அடைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.