தாராபுரம் அருகே நிலத்தை ஆக்கிரமித்த தனி நபர் - மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

தாராபுரம் அடுத்த காசிலிங்கம் பாளையம் நாவீதன் புதூரை சேர்ந்த மயிலால் என்பவருக்கு சொந்தமான நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்துள்ளதை மீட்டு தரக்கோரி, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தங்களது நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்துள்ளதை மீட்டு தர வலியுறுத்தி ஒரு குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் தாராபுரம் காசிலிங்கம்பாளையம் நாவீதன் புதூரை சேர்ந்த மயிலால் மற்றும் அவரது குடும்பத்தினருடன் வந்து, தங்களது நிலத்தை சட்ட விரோதமாக தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்துள்ளதாக ஆட்சியரிடம் மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது,

எனக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு அரசு சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இந்நிலையில் அந்த இடத்தையும் சேர்த்து அப்பகுதியைச் சேர்ந்த தனியார் ஒருவர் கம்பி வேலி போட்டு ஆக்கிரமித்துள்ளார்.

அந்த கம்பி வேலிக்குள் பொது குடிநீர் குழாய் உள்ளதால், ஊரைச் சுற்றிக்கொண்டு சென்று தண்ணீர் எடுக்க வேண்டிய சூழல் இருந்து வருகிறது. இதனால், அரசு அதிகாரிகள் நேரடியாக வந்து விசாரணை நடத்தி, ஆக்கிரமித்து அமைத்துள்ள கம்பிவேலியை அகற்றி தண்ணீர் பிடிக்க வழிவகை செய்ய வேண்டும்.

மேலும், எங்கள் பகுதிக்குள் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வந்து அடிக்கடி மிரட்டுகிறார்கள். கோவில் இடத்திற்கு நாங்கள் வரக்கூடாது என்றும் அடக்கு முறையை கையாண்டு வருகிறார்கள் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...