பொள்ளாச்சி அருகே சிறுமியை கடத்தி பாலியல் துன்புறுத்தல் - தந்தையின் நண்பர் கைது

பொள்ளாச்சி அருகே நண்பரின் மகளான 14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த 47 வயது கூலித் தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



கோவை: பொள்ளாச்சி அருகே 14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் 14 வயது மகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு காணவில்லை என சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரி அடிப்படையில் வழக்கு பதிவு செய்த தாலுக்கா காவல் நிலைய போலீசார் சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் சிறுமியின் தந்தையின் நண்பர் ஒருவர் சிறுமியை கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து கேரளா அருகே பதுங்கி இருந்த 47 வயது கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் அங்கிருந்த சிறுமியை மீட்ட போலீசார் விசாரணை மேற்கொண்ட போது சிறுமியை அந்த நபர் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து அந்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...