பொள்ளாச்சி அருகே சிறுமியை கடத்தி பாலியல் துன்புறுத்தல் - தந்தையின் நண்பர் கைது

பொள்ளாச்சி அருகே நண்பரின் மகளான 14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த 47 வயது கூலித் தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



கோவை: பொள்ளாச்சி அருகே 14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் 14 வயது மகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு காணவில்லை என சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரி அடிப்படையில் வழக்கு பதிவு செய்த தாலுக்கா காவல் நிலைய போலீசார் சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் சிறுமியின் தந்தையின் நண்பர் ஒருவர் சிறுமியை கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து கேரளா அருகே பதுங்கி இருந்த 47 வயது கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் அங்கிருந்த சிறுமியை மீட்ட போலீசார் விசாரணை மேற்கொண்ட போது சிறுமியை அந்த நபர் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து அந்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...