கோவை பன்னிமடை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன், ரூ.1.50 லட்சம் கொள்ளை - பரபரப்பு!

கோவை பன்னிமடை அருகே ஆண்டாள் அவென்யூவில் பிரபாகரன் என்பவர் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற நிலையில், அவரது வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன் நகை மற்றும் ஒன்றரை லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.



கோவை: பன்னிமடை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை ஆண்டாள் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (51). தனியார் கம்பெனியில் வேலை செய்து வரும் இவர் நேற்றைய தினம் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கவுண்டம் பாளையத்தில் உள்ள கோவில் விழாவிற்கு சென்றுள்ளனர்.



இந்நிலையில், இன்று காலை திரும்பி வந்த போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.



உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கையறையில் உள்ள பீரோக்கள் திறந்து அதில் இருந்த துணிமணிகள் சிதறி கிடந்துள்ளது.



மேலும் பீரோவில் இருந்த தங்க வளையல், மோதிரம், கம்மல் மற்றும் நெக்லஸ் என சுமார் 6 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.



இதுகுறித்து உடனடியாக தடாகம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துணை ஆய்வாளர் ஆறுமுக நயினார் மற்றும் போலீசார் உடனடியாக கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை பதிவு செய்தனர்.

மேலும் அருகிலுள்ள சி.சி.டிவி காட்சிகளை ஆய்வு செய்தபொது அதிகாலை 2 மணியளவில் திருடர்கள் வந்து திருடி செல்வது தெரியவந்தது. இதனையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...