பல்லடம் அருகே இரவில் கிராம நிர்வாக அலுவலரை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் - பரபரப்பு

பல்லடம் அருகே புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளை காலி செய்யக்கோரி இரவில் நோட்டீஸ் வழங்க வந்த கிராம நிர்வாக அலுவலரை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.



திருப்பூர்: துத்தேரிப்பாளையம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலரை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கள்ளிப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட துத்தேரிப்பாளையம் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 150 ஆண்டுகளாக வசித்து வருகின்றன. இங்கு கட்டப்பட்டுள்ள 63 வீடுகள் நீர்நிலை புறம்போக்கில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் வருவாய் துறை சார்பில் துத்தேரிப்பாளையம் கிராமத்தில் நீர்நிலை புறம்போக்கில் அமைந்துள்ள வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

ஆனால் கிராம மக்கள் மற்றும் வருவாய்த்துறை இடையே நடந்த பேச்சுவார்த்தையில் மூன்று மாத காலம் அவகாசம் அளிக்குமாறும் மாற்று இடம் வழங்குமாறு கிராம மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். மூன்று மாதங்கள் கழித்து கிராம மக்களுக்கு வழங்கிய கால அவகாசம் முடிந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் விஸ்வநாதன் மீண்டும் வீடுகளை காலி செய்யக்கோரி அறிவிப்பானை வழங்குவதற்காக இன்று இரவு நேரத்தில் வந்திருக்கிறார்.

வீட்டை காலி செய்ய முடியாது, அறிவிப்பாணையை வாங்க மறுத்ததால் வீட்டு சுவற்றில் ஒட்ட முயன்றுள்ளார்.



அப்போது ஆத்திரமடைந்த கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலரையும் அவரது காரையும் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



மேலும் கிராமத்தின் நுழைவு வாயிலில் சாலை முழுவதும் கற்களை அடுக்கி வாகனம் வெளியே செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் வட்டாட்சியர் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.



நீதிமன்ற உத்தரவுப்படி, நீர்நிலை புறம்போக்கில் குடியிருக்க அனுமதிக்க முடியாது எனவும், அறிவிப்பாணை வழங்க வந்த வருவாய்த்துறை அதிகாரிகளை சிறைபிடிப்பது தவறு எனவும், நாளை பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தையில் முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைக்குப் பிறகு கிராம நிர்வாக அலுவலரின் வாகனம் விடுவிக்கப்பட்டது.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...