குப்பைகளை தரம்பிரித்து சேகரித்த தூய்மைப் பணியாளர் - பாராட்டி பரிசு வழங்கிய கோவை ஆணையர்!

கோவை மாநகராட்சியில் அதிகளவு குப்பைகளை முறையாக தரம் பிரித்து சேகரித்த தூய்மை பணியாளர் வெண்ணிலா என்ற ஊழியரை, ஆணையர் மு. பிரதாப் நேரில் சென்று பாராட்டுத் தெரிவித்து பரிசு வழங்கினார்.


கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் பொதுமக்களின் வீடுகளுக்கே நேரில் சென்று தூய்மை பணியாளர்கள் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம் பிரித்து சேகரிக்க மாநகராட்சி அறிவுறுத்தியது. மேலும், ஒவ்வொரு வார்டுகளிலும் தெருக்கள் தனித்தனியே பிரிக்கப்பட்டு தூய்மை பணியாளர்கள் குப்பைகளை முறையாக தரம் பிரித்து சேகரித்து அகற்றி வருகின்றனர்.



குப்பைகள் முறையாக தரம் பிரித்து பெறப்படுகிறதா? என்பது குறித்து அவ்வப்போது மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று ஆய்வுகளும் செய்து வருகிறார். இந்நிலையில், கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட சிவதங்கம் நகர் பகுதியில் அதிக அளவிலான குப்பைகளை முறையாக தரம் பிரித்து சேகரித்த தூய்மை பணியாளர் வெண்ணிலா என்ற ஊழியரை, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று பாராட்டி பரிசு வழங்கினார்.



அதனைத் தொடர்ந்து அதே பகுதியில் மற்ற தெருக்களில் எவ்வாறு குப்பைகள் சேகரிக்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்தார். இந்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியிலும் ஏற்படுத்த வேண்டும் என அப்போது அவர் அறிவுறுத்தினார். மேலும், அதே பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளையும் ஆணையர் பிரதாப் ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வுகளின்போது வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் மாமன்ற உறுப்பினர்கள் பூங்கொடி சோமசுந்தரம், மரியராஜ் மற்றும் உதவியாளர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில் பாஸ்கர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...