கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு - கோவை உள்ளிட்ட 60 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக, கோவையில் உக்கடம், குனியமுத்தூர், ஆத்துப்பாலம், கரும்புக்கடை, ஜி எம் நகர், வசந்தம் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 15-க்கும் மேற்பட்ட வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள், இன்று காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை: கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கார் ஒன்று வெடித்து விபத்துக்குள்ளானது. இது வெறும் விபத்தல்ல இது சதித்திட்டத்தின் பின்னணி என்று போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

கார் வெடிப்புக்கு உள்ளானதில் ஜமீசா முபின் என்ற இளைஞர் பலியானார். ஜமீசா முபினின் பின்னணி மற்றும் அவர்களின் சகாக்கள் உள்ளிட்டவர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்பொழுது முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த நான்கு நாட்களில் இந்த வழக்கு சென்னை என்.ஐ.ஏ. அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கை கையில் எடுத்த என் ஐ ஏ அதிகாரிகள் தமிழ்நாடு போலீசாரிடமிருந்து பெறப்பட்ட கோப்புகளின் அடிப்படையில் விசாரணையை துரிதப்படுத்தினர்.

அதன்பேரில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் கோவை வந்த என். ஐ. ஏ அதிகாரிகள் ஜமீஷா முபினின் மனைவி மற்றும் முன்னாள் கைதான நபர்களிடம் வாக்குமூலம் பெற்று ஆவணப்படுத்தி இருக்கின்றனர்.



அதன் அடிப்படையில், இன்று காலை சென்னை, நெல்லை கோவை உள்ளிட்ட 60 இடங்களில் தேசிய முகமை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.



கோயம்புத்தூரை பொறுத்தவரையில் உக்கடம், குனியமுத்தூர், ஆத்துப்பாலம், கரும்புக்கடை, ஜி எம் நகர், வசந்தம் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பதினைந்திற்கும் மேற்பட்ட வீடுகளில் என் ஐ ஏ அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர்.



முன்னதாக கிடைக்கப் பெற்ற தடயங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் நடந்து வரும் இந்த சோதனையில், அடுத்த கட்டமாக யார் கைதாக போகின்றனர் ? என்ன கைப்பற்றபோகின்றது ? என்ற விவரங்கள் பின்னர்தான் தெரியவரும். சிறு கால இடைவெளியில் மீண்டும் தேசிய முகமை அதிகாரிகள் மேற்கொண்டுவரும் இந்த திடீர் சோதனை கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...