வால்பாறை அருகே அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் மீன் வலையில் சிக்கிய முதலை - சுற்றுலா பயணிகள் அச்சம்!

வால்பாறை அருகே அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் மீனுக்காக வீசப்பட்ட வலையில், சிக்கிய முதலையை பிடிக்கும் பணியில் வனத்துறை தீவிரம். முதலையை விரைவில் பிடிக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் மீனுக்காக வீசப்பட்ட வலையில் முதலை ஒன்று சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை அருகேயுள்ள உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி என்பது அதிகளவில் மக்கள் வந்து செல்லும் பிரபலமான சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு உள்நாடு மட்டுமல்லாது வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியை காண வந்து செல்கின்றனர்.



இந்நிலையில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே மீன் பிடிப்பதற்கு வலையை விரித்துள்ளனர். இதில் முதலை ஒன்று சிக்கிக்கொண்டு நீண்ட நேரம் போராடி கொண்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்தது மட்டுமல்லாமல் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.



மீன் வலையில் சிக்கிய முதலையை வனத்துறையினர் காப்பாற்றுவதற்காக தண்ணீரில் இறங்கிய நிலையில், ஆட்களை பார்த்ததும் முதலை தண்ணீருக்குள் சென்று மறைந்தது.

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் முதலை இருப்பதை கண்ட சுற்றுலா பயணிகள் அச்சத்தில் இருந்து வரும் நிலையில், முதலையை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், அதிக மக்கள் வந்து செல்லும் சுற்றுலா தலம் என்பதால், உடனடியாக முதலையை பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என வனத்துறைக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...