வனத்துறை சார்பில் மலைக் கிராமங்களில் காட்டுத் தீ குறித்து விழிப்புணர்வு கூட்டம்

கோடைக் காலம் தொடங்கிவிட்டதால் வெப்பத்தின் காரணமாகவும், அதிகப்படியான பனிப்பொழிவு காரணமாகவும், வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் எல்லாம் கருகத் தொடங்குவதால், காட்டுத்தீ ஏற்பட வாய்ப்புள்ளதால் உடுமலை சுற்றுவட்டாரத்தில் உள்ள மலைக் கிராமங்களில் காட்டுத் தீ குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டது.


திருப்பூர்: காட்டுத்தீயினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து அதிகாரிகள் மலைவாழ் மக்களுக்கு எடுத்துரைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை வனக்கோட்டத்தில் கோடைக் காலம் தொடங்கிவிட்டதால் வெப்பத்தின் காரணமாகவும், அதிகப்படியான பனிப்பொழிவு காரணமாக வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் எல்லாம் கருகத் தொடங்குவதால் காட்டுத்தீ ஏற்பட வாய்ப்புள்ளது.



இதைக் கருத்தில் கொண்டு திருப்பூர் வனக்கோட்டத்தில் அமைந்துள்ள தளிஞ்சி, மஞ்சம் பட்டி, கோடந்தூர், பொருப்பாறு உட்பட்ட 17 செட்டில்மென்ட்டுகளிலும், வன எல்லையில் உள்ள கிராமங்களிலும் காட்டுத்தீயினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.



அதன்படி கோடந்தூர்,தளிஞ்சி மலைவாழ் மக்களுக்கும், குதிரையாறு அணை தொடக்கப்பள்ளியிலும் காட்டுத்தீயினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் க.கணேஷ்ராம் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது.



இதில் உடுமலைப்பேட்டை வனச்சரகர் சிவக்குமார், அமராவதி வனச்சரகர் சுரேஷ், கொழுமம் வனச்சரகர் மகேஷ் மற்றும் வனப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...