திருப்பூர் உடுமலையில் மக்கள் நீதிமன்றம் - 158 வழக்குகளுக்கு சுமார் ரூ.4 கோடிக்கு தீர்வு

உடுமலையில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 158 வழக்குகளுக்கு சுமார் 4 கோடி ரூபாய்க்கும் மேல் தீர்வு காணப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 158 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் கச்சேரி வீதியில் உள்ள நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இந்த மக்கள் நீதிமன்றம் 4 அமர்வுகளாக நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு உடுமலை வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் சார்பு நீதிபதியுமான மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி பாலமுருகன் ஜே.எம் 1 நிதிபதி விஜயகுமார், ஜே.எம். 2 நிதிபதி மீனாட்சி ஆகியோர் முன்னிலையில் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

அதன்படி சிறு குற்றத்துக்குரிய 77 வழக்குகள் ஒரு லட்சத்து 22ஆயிரத்து 200க்கும், காசோலை மோசடி குறித்த 22 வழக்குகளில் பத்து வழக்குகளுக்கு ரூ.42 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் தீர்வு காணப்பட்டது.

வங்கி வாராகடன் குறித்த 25 வழக்குகளில் 15 வழக்குகளுக்கு 63 லட்சத்து 66 ஆயிரத்து 608 ரூபாய்க்கும்,மோட்டார் வாகன விபத்துக்கள் குறித்த 95 வழக்குகளில் 42 வழக்குகள் ரூபாய் 2 கோடி 67 லட்சத்து 52 ஆயிரத்து 533க்கும் தீர்வு காணப்பட்டது.

மனமுறிவு தொடர்பான 10 வழக்குகளில் மூன்று வழக்குகள் இரண்டு லட்சத்து 38 ஆயிரத்துக்கும், இதர சிவில் வழக்குகள் 52-ல் 11 வழக்குகள் 81 லட்சத்து 18 ஆயிரத்து 546 ரூபாய்க்கும் தீர்வு காணப்பட்டன.

மொத்தம் 281 வழக்குகள் எடுக்கப்பட்டு 158 வழக்குகளுக்கு நான்கு கோடியே 58 லட்சத்து 72ஆயிரத்திற்கு 887 தீர்வு காணப்பட்டது.

இதில் அரசு வழக்கறிஞர்கள் சேதுராமன் ரவிச்சந்திரன் மற்றும் வழக்கறிஞர் செந்தில்குமார் சத்தியவாணி உள்ளிட்ட இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் வங்கி அதிகாரிகள், மூத்த, இளம் வழக்கறிஞர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...