தாராபுரம் அருகே பன்றிகளுக்கு மர்ம நோய் தாக்குதல் - அணையில் வீசப்பட்ட இறந்த பன்றிகளின் உடல்கள்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மர்ம பன்றிகளுக்கு மர்ம நோய் தாக்கிய நிலையில் இறந்த பன்றிகளின் உடல்களை நல்லத்தங்கால் ஓடை நீர்த்தேக்க அணையில் வீசிச் சென்றதால் பரபரப்பு.


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ளது நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்க அணை. இந்த அணைக்கு பழனி சண்முகா நதி பகுதியில் மழை பெய்யும் போது உபரி நீர் அணைக்கு வந்து சேர்கிறது.



இந்த அணையின் மூலம் 6,300 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. அதேநேரம் குமாரபாளையம் கரையூர் பெரமியம் உள்ளிட்ட கிராமங்களுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு இந்த அணை முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த நிலையில் நல்லதங்காள் ஓடை அணை வாய்க்கால் பகுதியில் செந்தில், ரவி மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் குடிசை போட்டு பன்றி வளர்ப்பு வியாபாரம் செய்து வருகின்றனர்.



இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்துக்கும் மேற்பட்ட பன்றிகளுக்கு மர்ம காய்ச்சல் வந்துள்ளது. இதனால் பன்றிகள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து இறந்துள்ளது.

இறந்த பன்றிகளை பன்றி வளர்க்கும் நபர்கள் குழி தோண்டி புதைக்காமல் இறந்த பன்றிகளை நல்லதங்காள் அணை வாய்க்காலில் வீசி சென்றுள்ளனர். இதனால் வாய்க்காலில் சென்று கொண்டிருந்த தண்ணீர் துர்நாற்றம் வீசத் தொடங்கியது.

அணையின் தண்ணீரைபயன்படுத்தி வந்த கிராம மக்கள் துர்நாற்றம் வீசுவதை கண்டு அணைப்பகுதி முழுவதும் சுற்றிப் பார்த்தனர். அப்போது பத்துக்கும் மேற்பட்ட பன்றிகள் இறந்த நிலையில் ஆற்றில் மிதந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் பொன்னிவாடி கிராமம் முழுவதும் கால்வாய் தண்ணீரை பயன்படுத்திய கிராம மக்களுக்குவயிற்றுப்போக்கு வாந்தி ஏற்பட்டு வருவதாகவும் அதனால் உடனடியாக சுகாதாரத்துறை அதிகாரிகள் பொன்னிவாடி கிராமத்திற்கு வந்து மருத்துவ குழுவுடன் பரிசோதனை செய்ய வேண்டும்.

மேலும் நல்ல தங்காள் நீர் ஓடை வாய்க்காலில் நோய்வாய் பட்டு இறந்த பன்றிகளை தூக்கி எறிந்த நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுபற்றி அறிந்த பொன்னிவாடி ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உடனடியாக நோய்வாய்ப்பட்டு இறந்த பன்றிகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...