போரில் வீரமரணமடைந்த உதகை ராணுவ வீரர் ராமகிருஷ்ணனின் நினைவுநாள் - ஆட்சியர் நேரில் அஞ்சலி!

2001ஆம் ஆண்டு காஷ்மீர் எல்லையில் நடைபெற்ற ஆப்ரேஷன் மேக்தூத் போரில் வீரமரணம் அடைந்த ராமகிருஷ்ணனின் 21ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் நேரில் அஞ்சலி செலுத்தினார்.


நீலகிரி: ராணுவ வீரர் ராமகிருஷ்ணனின் 21ஆம் ஆண்டு நினைவு நாளில் நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள அவரது நினைவிடத்தில் ஆட்சியர் அம்ரித் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே அமைந்துள்ள கப்பத்தொரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். ராணுவ வீரரான இவர், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஜம்மு காஷ்மீர் பகுதியில் இந்தியா பாகிஸ்தான் எல்லைப்பகுதி ஆன 16,200 அடி உயரத்தின் இமயமலை பனிப்பொழிவில் பணியாற்ரி வந்துள்ளார்.

இந்நிலையில், 2001ஆம் ஆண்டு சியாச்சின் - கிளாசியர் பகுதியில் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது நடந்த ஆப்ரேஷன் மேக்தூத் என்ற போரில் ராமகிருஷ்ணன் வீரமரணம் அடைந்தார்.

வீரமரணம் அடைந்த ராமகிருஷ்ணனுக்கு சொந்த ஊரான கப்பத்தொரை கிராமத்தில் உடல் கொண்டு வரப்பட்டு முழு ராணுவ மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டு போர் நினைவு சின்னம் அமைக்கப்பட்டது.

இதனிடையே, போரில் வீரமரணம் அடைந்த ராமகிருஷ்ணனுக்கு நீலமலை முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கத்தின் சார்பாக கடந்த ஆண்டு முதல் ராணுவ முறைப்படி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.



இந்நிலையில், இன்று நடைபெற்ற 21-வது நினைவு தினத்தில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித், குன்னூர் வெலிங்டன் ராணுவ அகாடமி கமாண்டண்ட் எம் சி ஐயப்பன், உதகை நகர மற்றும் ஊரக காவல் துணை கண்காணிப்பாளர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், மற்றும் பள்ளி மாணவர் மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மௌன அஞ்சலி செலுத்தி, ராணுவ வீரரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.



இந்த நிகழ்வின் போது ராமகிருஷ்ணனின் தாயார் சுப்புலட்சுமி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர், அப்போது உடனிருந்த மாவட்ட ஆட்சியர் அம்ரித் அவருக்கு ஆறுதல் கூறினார்.

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் அம்ரித், இந்திய தாய் நாட்டிற்காக மழையிலும், கடும் பனிப்பொழிவிலும் தொடர்ச்சியாக போராடிவரும் சூழ்நிலையில் ராணுவ வீரர்களுக்கான அனைவரும் மரியாதை செலுத்த வேண்டும் என்றார்.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...