வால்பாறையில் சிறுத்தை நடமாடும் வீடியோ வைரல் - பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!

கோவை மாவட்டம் வால்பாறையில் இரவு நேரத்தில் சிறுத்தை நடமாடிய வீடியோ வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பாதுகாப்பாக நடமாட வேண்டுமென பொதுமக்களுக்கு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் அண்மைக்காலமாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

வனப்பகுதியிலிருந்து இங்கு நுழையும் சிறுத்தைகள், வீடுகளில் வளர்க்கும் நாய், கோழி, ஆடு, பூனை போன்ற வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி கொன்று தூக்கிச்செல்வது தொடர்கிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.



இந்த நிலையில், வால்பாறை காமராஜர் நகர் சாலை குடியிருப்பு பகுதியில் இருந்து இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று சாலையில் கடந்து சென்றது. இதனை, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்துள்ளனர்.



சாலையைக் கடக்கும் அந்தச் சிறுத்தை வனப்பகுதிக்குள் செல்வதுபோல் பதிவாகியுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

இதையடுத்து, புதுத்தோட்ட பகுதியில் இருந்து, வால்பாறைக்கு வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் வரும்போது கவனமாக இருக்க வேண்டுமென வனத்துறை பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

மேலும், வனவிலங்குகள் அருகில் செல்ல வேண்டாம் என்றும் வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...