கோவை அருகே ஷேர் ஆட்டோ மீது காய்கறி ஏற்றிவந்த வாகனம் மோதி விபத்து - தம்பதி படுகாயம்!

கோவை வடவள்ளி அருகே சாலையில் சென்ற பயணிகள் ஆட்டோ மீது காய்கறி லோடு ஏற்றி வந்த வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், கணவன், மனைவி படுகாயமடைந்தனர்.


கோவை பவானி வீதியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மனைவி சந்திரா. பொன்னுசாமி பயணிகள் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

இந்நிலையில், பொன்னுச்சாமியும், மனைவி சந்திராவும் வடவள்ளியில் இருந்து தொண்டாமுத்தூர் நோக்கி ஆட்டோவில் சென்றதாக தெரிகிறது.



அப்போது, எதிரே அதிவேகமாக காய்கறி லோடு ஏற்றி வந்த டாடா ஏஸ் வாகனம், பொன்னுசாமி வந்த ஆட்டோ மீது மோதியது.



இதில், ஆட்டோ நிலைக்குலைந்தது தூக்கி வீசப்பட்டதில் பொன்னுச்சாமி , சந்திரா ஆகியோர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர்.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து தொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து டாடா ஏஸ் வாகனத்தை ஓட்டி வந்த கவுன்டம்பாளையம் பகுதியை சேர்ந்த மயில்சாமி என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...