திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.1 கோடிக்கு பருத்தி விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று பருத்தி விற்பனை மறைமுக ஏலம் மூலம் நடைபெற்றது.
இதில், திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 415 பேர் தாங்கள் விளைவித்த பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர் திண்டுக்கல் ஈரோடு,சேலம் கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் வந்திருந்து மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்.
அதில், பருத்தி அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூபாய்.8656-க்கும் குறைந்தபட்சவிலையாக ரூபாய்.6700-க்கும் சராசரி விலையாக ரூ 7850-க்கும் விற்பனையானது.
விற்பனையான பருத்தியின் மொத்த அளவு 3944 மூட்டைகள், குவிண்டால் 130.795. இதன் மொத்த மதிப்பு ரூபாய் 99,58,717 ஆகும்.
இந்த ஏலத்தில் 15 வியாபாரிகள் பங்கேற்றதாக திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் கண்ணன்(பொறுப்பு) தெரிவித்தார்.
இதில், திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 415 பேர் தாங்கள் விளைவித்த பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர் திண்டுக்கல் ஈரோடு,சேலம் கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் வந்திருந்து மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்.
அதில், பருத்தி அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூபாய்.8656-க்கும் குறைந்தபட்சவிலையாக ரூபாய்.6700-க்கும் சராசரி விலையாக ரூ 7850-க்கும் விற்பனையானது.
விற்பனையான பருத்தியின் மொத்த அளவு 3944 மூட்டைகள், குவிண்டால் 130.795. இதன் மொத்த மதிப்பு ரூபாய் 99,58,717 ஆகும்.
இந்த ஏலத்தில் 15 வியாபாரிகள் பங்கேற்றதாக திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் கண்ணன்(பொறுப்பு) தெரிவித்தார்.