சிவராத்திரி நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு - ஈஷாவில் ஹெலிகாப்டர் இறங்கும் தளம் அமைக்கும் பணி தீவிரம்!

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் வரும் 18ம் தேதி நடைபெறவுள்ள சிவராத்திரி நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ பங்கேற்கவுள்ளார். இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈஷா யோகா மையத்ததில் ஹெலிகாப்டர் இறங்கும் தளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.



கோவை: கோவை ஈசா யோகாவில் வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ள சிவராத்திரி நிகழ்ச்சியில் இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மூ கலந்து கொள்ள உள்ளார்.

இதையொட்டி, 18 ஆம் தேதி மாலை 3 மணியளவில் டெல்லியில் இருந்து தனி விமான மூலம் அவர் கோவை விமான நிலையம் வருகிறார்.

முதல் முறையாக கோவை வரும் குடியரசு தலைவர் ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகை செல்கிறார்.

பின்னர் வடவள்ளி, தொண்டாமுத்தூர் வழியாக ஈசா யோகா மையத்திற்கு செல்கிறார்.

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு செல்லவுள்ள சாலைகளை ஐஜி சுதாகர் நேரில் ஆய்வு செய்தார்.

மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன், மாநகர காவல் ஆணையர் பாலகிருஸ்ணனுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அதுமட்டுமின்றி, குடியரசு தலைவர் வருகையையொட்டி சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ வருகையை ஒட்டி ஈசா யோகா மையத்தில் ஹலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...