தாராபுரத்தில் சாலை தடுப்புச்சுவரில் பைக் மோதி விபத்து - தனியார் நிறுவன மேலாளர் உட்பட 2பேர் பலி!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள நஞ்சியம்பாளையம் அருகே புறவழிச் சாலை மைய தடுப்புச் சுவரில் இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், தனியார் நிறுவன மேலாளர் உள்பட இரண்டு பேர் பரிதாபமாக உயிரிந்தனர்.



தாராபுரம்- கொட்டமுத்தம்பாளையம் தெற்கு குடில்தெருவை சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் ரஞ்சித்குமார்,(வயது 23). தெலங்கானா மாநிலம் மனோஜ் சோமநாதன், மகன் மனோஜ் விஸ்வநாதாச்சாரி (வயது 37). நேற்றிரவு இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.



தாராபுரம் புறவழிச் சாலையில் நஞ்சியம்பாளையம் அருகே வந்துகொண்டிருந்தபோது நஞ்சியம்பாளையம் பாலம் பகுதியில் இவர்களது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சாலை மைய தடுப்புச் சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.



இந்த விபத்தில், தலையில் அடிபட்டு மூளை சிதறிய நிலையில் ரஞ்சித்குமார் மற்றும் மனோஜ்விஸ்வநாதாச்சாரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

விபத்தில் பலியான இருவரது உடல்களும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் உடல்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில், இருவரும் அகலமான ரோட்டில் இருந்து குறுகலான ரோட்டிற்கு மாறும்போது இருசக்கர வாகனத்தை கட்டுப்படுத்த இயலாமல் சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளது.

விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியிருப்பது கொட்டமுத்தம்பாளையம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...