கொத்தடிமைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் - கோவை ஆட்சியர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்பு

கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றிடவும், கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி முன்னிலையில் அதிகாரிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


கோவை: கொத்தடிமைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றிடவும் கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை உருவாக்கிடவும் வருடம் தோறும் பிப்ரவரி 9ஆம் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி இன்று இத்தினத்தை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் உறுதி மொழி ஏற்றுக் கொள்ளப்படுகிறது.



அதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இத்தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.



முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார்.



பின்னர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.



இந்நிகழ்வில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோகிலா, தொழிலாளர் உதவி ஆணையர் காயத்ரி உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...