உதகையில் கடைகளுக்கு அதிகாரிகள் சீல் - வியாபாரிகள் போராட்டத்தால் பரபரப்பு!

உதகை மார்க்கெட் பகுதியில் உள்ள நகராட்சி கடைகளுக்கு வாடகை பாக்கி இருப்பதாகக் கூறி தொடர்ந்து சீல் வைத்து வரும் நகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கையைக் கண்டித்து வியாபாரிகள் சீல் வைத்த கடையின் முன் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.



நீலகிரி: உதகையில் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், நகராட்சி கடைகளுக்கு முன்பாக கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி தினசரி சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடந்த சில நாட்களாக வாடகை செலுத்தாத கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைக்கும் நடக்கடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இதனால் பெரும்பாலான கடைகளுக்கு 90 சதவீத வாடகை தொகை செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 சதவீத வாடகையை மார்ச் மாதம் இறுதிக்குள் செலுத்த வியாபாரிகள் கால அவகாசம் கேட்டுள்ளனர்.

அதற்கு நகராட்சி ஆணையர் ஒப்புக் கொண்டுள்ள நிலையில் குறைந்தபட்ச வாடகை தொகை நிலுவையில் வைத்துள்ள கடைகளைக் கண்டறிந்து அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர்.

குறிப்பாக நேற்று ஒரே இரவில் 30 கடைகளுக்குச் சீல் வைத்தனர்.



இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், சீல் வைப்பு நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என்று கூறி சீல் வைத்த கடையின் முன் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனிடையே புதிய வாடகை முறையைத் தவணை முறையில் செலுத்தி வருவதாகவும், மார்ச் இறுதிக்குள் நிலுவையில் உள்ள வாடகையைச் செலுத்தி விடுவதாகக் கூறிய வியாபாரிகள், நகராட்சி சீல் வைக்கும் நடவடிக்கையைத் தொடர்ந்தால் கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...