பள்ளி, கல்லூரிகளில் ஆவின் மையம் அமைப்பது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பாக பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகளில் ஆவின் மையம் அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆவின் ஒன்றியத் தலைவர் ப.வெ.தாமோதரன் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் த.கிருஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் கூறுகையில், ஆவின் நிறுவனம் இலாபம் நோக்கமில்லாமல் இயங்கும் ஒரு கூட்டுறவு நிறுவனம் ஆகும். நேரடியாக விவசாயிகளிடமிருந்து பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெறப்பட்ட பால் மாவட்ட பண்ணைகளுக்கு நேரடியாக அனுப்பபடுகிறது.

ஆவின் நிறுவனம் பொதுமக்களின் நலனிலும் உடல் ஆரோக்கியத்தையும் மையாமாக்க கொண்டு 3 சதவிகிதம் குறைந்த அளவு கொழுப்புச்சத்து கொண்ட சமன்படுத்திய பால், 4.5 சதவிகிதம் கொழுப்புச் சத்துள்ள நிலைப்படுத்திய பால், 6 சதவிகிதம்  கொழுப்புச் சத்துள்ள நிறை கொழுப்புப்பால் என மூன்று வகையான பால் நுகர்வோர்களுக்கு அரசு நிர்ணயித்த விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது விற்பனையை அதிகபடுத்தும் நோக்கில் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகளில் ஆவின் மூலம் தரமாகவும் நுகர்வோர் பயன்பெரும் வகையில் கடைகள் அமைக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

அனைவரும் ஆரோக்கியமாகவும் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் வாழ வேண்டும் என்ற நோக்கில் ஆவின் மூலம் கடைகள் அமைக்கப்பட்டு நுகர்வோர்களுக்கு பால், நெய், வெண்ணெய், ஐஸ்கிரிம், பன்னீர் போன்ற பொருட்கள் விற்பணை செய்யும் பொருட்டு நடவடிக்ககைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் ஆவின் பொது மேலாளர் சுமதி, துணை பொது மேலாளர் (விற்பனை) ரமேஸ்குமார், உதவி பொது மேலாளர் சக்கரவர்த்தி (தரக்கட்டுப்பாடு), ராஜேஸ் (பண்ணை) மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...