கோவை சி.எஸ்.ஐ கல்வி நிறுவங்களின் புதிய கல்விக்குழு கன்வீனர் தேர்வு


சி.எஸ்.ஐ. கோவை திருமண்டலத்தின் கீழ் பொறியியல் கல்லூரிகள், பட்டையைப் படிப்பு கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள், பள்ளிகள் என இருநூற்றுக்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை நிறுவகிப்பதற்கான கூட்டுக் குழு கன்வீனர் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படும். அதன்படி கடந்த 29,30 ஆகிய தேதிகளில் நடைபெற்ற சி.எஸ்.ஐ. திருமண்டலப் பேரவைத் தேர்தலில் கல்விக்குழு கன்வீனராக டாக்டர். ஏ.சந்திரன் தேர்வு செயப்பட்டார். 

கோவை பந்தைய சாலையில் உள்ள சி.எஸ்.ஐ திருமண்டல அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு பேராயர் திமோத்தி ரவீந்தர், செயலாளர் பால்செல்வின் பிரபுதாஸ் ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து வைத்து வாழ்த்துக் கூறினார். பதவி ஏற்றுக் கொண்ட பின்பு, செய்தி வெளியிட்டுள்ள கன்வீனர் டாக்டர் ஏ.சந்திரன் தற்போது கல்விக்கும் வேலை வாய்ப்பிற்கும் இடையில் நிறைய இடைவெளி உள்ளது. கல்வி முடித்த மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில் நிறைய சிரமங்கள் உள்ளது. வரும் 2020ம் ஆண்டில் படித்து வெளியில் வரும் மாணவர்களில் 27 சதம் பேர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கு என்று ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. எனவே, சி.எஸ்.ஐ. கல்வி நிறுவங்களில் மாணவர்களுக்கு கல்வியுடன், வேலை வாய்ப்பை பெறுவதற்கான தகுதி பயிற்சியும், மாணவர்களின் தனித்திறமைகளை ஊக்குவிக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Newsletter

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...