தை மாதம் முன்னிட்டு மருதமலையில் குவிந்த பக்தர்களால் வாகன ஓட்டிகள் அவதி


கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசிதிபெற்றது மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மருதமலை முருகன் கோவில். முருகப்பெருமானின் ஏழாவது படைவீடாகக் கருதப்படும் மருதமலையில் ஆண்டுதொரும் எந்நாளும் பக்தர்கள் ஏராளமானோர் வழிபடச் சென்று வருவர்.

குறிப்பாக தை மாதத் திருநாட்களில் பக்கதர்களின் எண்ணிக்கை அங்கு அதிகரித்தே காணப்படும்.



இவ்வருடம் தை மாதத் திருநாட்கள் நடைபெற்று வருவதாலும் இன்று விடுமுறை நாள் (ஞாயிறு) என்பதாலும் ஆயிரக்கணக்கான முருகன் பக்தர்கள் மருதமலையில் குவிந்துள்ளனர்.

வாகனங்களில் மருதமலை முருகன் கோவில் செல்வோர்கள் மலையில் அமைக்கப்பட்டுள்ள சாலையின் வழியிலேயே மேலே சென்று கோவிலுக்கு சென்றுவிடுவர்.

அதன்படி, இன்று ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் வந்த நிலையில் மருதமைலை முருகன் கோவிலின் மேற்பகுதியில் வாகனங்கள் நிறைந்து காணப்படுகிறது. 

குறிப்பாக, கார் உள்ளிட்ட வாகனமே அதிகமாக வந்துள்ளதால் மருதமலை முருகன் கோவிலின் அடிவாரத்தில் சுமார் 500 மீட்டர் அளவிற்கு வாகனப்போக்குவரத்து பாதிக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து, மருதலை கோவிலுக்கு வந்திருந்த ஒருவர் கூறுகையில், தற்போது மேலே கோவிலுக்கு சென்றுள்ள வாகனங்கள் திரும்பி கீழே வந்தால் மட்டுமே கீழ் பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ள பக்தர்கள் மேல் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு செல்ல முடியும்" என்றார்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...