கோவை காவல் ஆணையர் அமல்ராஜுக்கு கண்டனம் தெரிவித்த கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா மாணவர் சங்கம்


ஜல்லிக்கட்டிற்கான மாணவர்களின் போராட்டத்தை கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட மாணவர் அமைப்பினர் திசைதிருப்பியதாக கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் கூறியுள்ளதற்கு அந்த அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.



ஜல்லிகட்டு மீதான தடையை நீக்கி நிரந்தர சட்டம் கொண்டுவர வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் பொதுமக்களும் இணைந்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில் போராட்டத்தை கை விடுமாறு காவல்துறையினர் போராட்டகாரர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்ததையடுத்து காவல் துறையினர் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி போராட்டத்தை கலைத்தனர்.

இதனையடுத்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்தது. இந்த நிலையில் கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட சில மாணவ அமைப்புகள் மாணவர்களின் போராட்டத்தை திசைதிருப்பியதாக தெரிவித்தார்.

மாநகர காவல் ஆணையர் அமல்ராஜின் இத்தகைய பேச்சுக்கு அந்த அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் அப்துர் ரகுமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மீது காவல் துறை ஆணையர் அமல்ராஜ் அவதூறு பரப்பும் விதத்தில் பேசியதாகவும், அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறிய அவர், தமிழக அரசு அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...