மாணவர்களுக்கு தங்கள் மையத்துறையிலேயே வேலைவாய்ப்பு தரும் விதமாக குமரகுரு கல்லூரிக்கும் பி3 நிறுவனத்துக்கும் இடையே புதிய ஒப்பந்தம்


கோவையை சேர்ந்த குமரகுரு கல்லூரிக்கும் ஜெர்மன் நாட்டை தலைமை அலுவலகமாக கொண்டு செயல்பட்டு வரும் பி3 நிறுவனத்திற்கும் இடையே கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 



மாணவர்களுக்கு தங்களின் மையத் துறையிலேயே வேலைவாய்ப்பு அமைத்து தருவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும். 

பி3 நிறுவனத்தின் பயிற்சி பிரிவான பி3ஏ-உம், குமரகுரு கல்லூரியும் இணைந்து மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகளை மேற்கொள்ளவுள்ளது. 

இப்பயிற்சியில் தேர்ச்சிபெறுபவர்களுக்கு பி3 நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு அளிக்கப்படும். மற்ற மாணவர்களுக்கு பிற நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கின்றது.

குமரகுரு நிறுவனத்தின் தலைவர் சங்கர் வானவராயர் அவர்களுக்கும், பி3 நிறுவனத்தின் துணைத் தலைவர் நவ்தீப் கிரண் புராணிக் அவர்களுக்கும் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 

இந்த ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாக மாணவர்களுக்கு வடிவமைப்பு, ஆராய்தல், மற்றும் பராமரிப்பு போன்ற பல்வேறு கோணங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. தொழில்துறை சார்ந்த ப்ராஜெக்ட், இறுதி ஆண்டு மாணவர்களுக்கான ப்ராஜெக்ட், இன்டெர்ன்ஷிப் மற்றும் வேலை வாய்ப்புக்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...