2வது நாளாக கோவையில் இளைஞர்களால் அனல் பறக்கும் ஜல்லிக்கட்டு போராட்டம்!


தமிழ்நாடு முழுவதும் கல்லூரி மாணவர்களும் இளைஞர்களும் ஜல்லிக்கட்டிற்காக மாபெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக கோவையில் நேற்று 100 மாணவர்களால் துவங்கப்பட்ட இந்த  அறப்போராட்டம் இரவு முழுதும் தொடர்ந்து இன்று வரை நடைபெற்று வருகிறது. இதில் கோவையில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களும், பள்ளி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து அலைகடல் என வ.உ.சி. மைதானத்தில் இன்னும் வந்த வண்ணம் உள்ளனர்.









இரண்டாவது நாளாக தொடரும் இந்தப்போராட்டத்தில் கல்லூரி மாணவர்கள் பள்ளி மாணவர்கள் சமூக வலைதளம் மூலமாக ஒன்றிணைந்து இன்று காலை 10 மணியளவில் கொடிசியா மைதானத்தில் இருந்து பேரணியாக திரண்டு வ.உ.சி மைதானத்தை வந்தடைந்தனர். இன்னும் பல்வேறு கல்லூரி மாணவர்கள் இங்கு வந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் இன்று கூடி மத்திய அரசு, மாநில அரசையும் மற்றும் பீட்டாவை தடை செய்யக்கோரியும்  பல்வேறு கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...