சாடிவயலில் காட்டு யானை தாக்கி கும்கி யானை தந்தம் உடைந்தது

கோவை மாவட்டம், கோவை குற்றாலம் அருகே சாடிவயல் யானைகள் முகாம் அமைந்துள்ளது. இப்பகுதி மலையடிவாரப் பகுதி என்பதால் அவ்வப்போது அங்குள்ள குடியிருப்புகளுக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்ட இங்கிருந்து கும்கி யானைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், இங்கு உடல் நலம்குன்றிய யானைகளுக்கு மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில், சாடிவயல் யானைகள் முகாமில் நேற்று இரவு காட்டு யானைகள் நுழைந்து முகாமில் இருந்த கும்கி யானைகளை தாக்கின. இதில், அங்கிருந்த சுஜய் என்னும் கும்கி யானையை காட்டு யானைகள் பலமாக தாக்கின.



காட்டு யானைகளின் இந்த தாக்குதலில், கும்கி யானை சுஜயின் வலது தந்தம் உடைந்தது. இதைத்தொடர்ந்து, கும்கி யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு  வருகிறது

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...