வால்பாறை சின்கோனா பகுதியில் உள்ள கல்லூரியில் யானைகள் அட்டகாசம்

வால்பாறையில் சின்கோனா பகுதியில் பாரதியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் சமீப காலமாக அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புக்குள் புகுந்து வீடுகளையும், ரேஷன் கடைகளை உடைத்தும் சேதப்படுத்தி வருவது வாடிக்கையாகி விட்டது.



 
இதேபோல் இன்று அதிகாலையில் சின்கோனா பாரதியார் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானைகள் வகுப்பறைகளின் கதவு, ஜன்னல்கள் ஆகியவற்றை சேதப்படுத்தியது. யானைகளின் இந்த செயலால் மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். வரும் காலங்களில் இதே போன்று சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசு அப்பகுதியைச் சுற்றி மின்வேலிகள் அமைத்து வனவிலங்குகள் நுழையாமல் தடுக்க வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...