கோவை மாநகர காவல் துறை சார்பில் ஆதரவற்ற மாணவ மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்


கோவையின் பல்வேறு இடங்களிலுள்ள ஆதரவற்றோர் காப்பகங்களில் தங்கி ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் தொடக்கப்பள்ளி தொடங்கி கல்லூரி படிப்பு வரையில் படிக்கின்றனர். 

இந்த மாணவ மாணவிகளுக்கென பிரத்யேகமாக விளையாட்டுப் போட்டிகளை கோவை மாநகர காவல் துறையினர் நடத்தி வருகின்றனர். அதன்படி, வரும் 8-ம் தேதி நடைபெற உள்ள இந்த விளையாட்டு போட்டியை கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் தொடங்கி வைக்கிறார். 

இது குறித்து அவர் 'சிம்ப்ளி சிட்டி'க்கு அளித்த  பேட்டியில்  கூறியதாவது :- 

கோவையில் உள்ள ஆதரவற்ற மாணவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் ஆண்டு தோறும் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. தொடர்ந்து 5-வது ஆண்டாக வரும் 8-ம் தேதி கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் இப்போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் கோவையிலுள்ள 17 காப்பகங்களில் தங்கியிருக்கும் 700க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்க உள்ளனர். 

நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல் என 20 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டிகளில் வெற்றி பெறுவோர்க்கு பரிசுகளும் மற்றவர்களுக்கு ஆறுதல் பரிகளும் காவல்துறை சார்பில் வழங்கப்பட உள்ளது. அன்று மாலை நடைபெற இருக்கும் பரிசளிப்பு விழாவில் கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் மற்றும் துணை ஆணையர் (சட்டம் & ஒழுங்கு) லட்சுமி ஆகியோர் பங்கேற்கின்றனர். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...