வாலிபர் சங்கத்தினரை தாக்கிய சென்னை காவல் துறையினரைக் கண்டித்து வாலிபர் மற்றும் மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஏ டி எம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் சங்கத்தினர் மீது தாக்குதல் நடத்திய சென்னை பள்ளிக்கரனை காவல்துறையினரைக் கண்டித்து கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பணமில்லாத ஏ டி எம் மையங்களில் பணத்தை நிரப்ப வலியுறுத்தி கடந்த சனியன்று சென்னை மேடவாக்கத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பள்ளிக்கரனை காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். 

இந்த சம்பவத்தைக் கண்டித்து வாலிபர் மற்றும் மாணவர் சங்கங்கள் சார்பில் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாணவர் சங்கம் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் சென்னை பள்ளிக்கரனை காவல்துறையினரின் அராஜக நடவடிக்கையைக் கண்டித்தும், சம்பந்தப்பட்ட காவல்துறையினரை கைது செய்ய வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். 

மேலும், அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம், துணிந்து நின்று போரிடுவோம் என்கிற ஆவேச முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...