அரசு பொதுமருத்துவமனை குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கி புத்தாண்டை கொண்டாடிய ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழும மாணவர்கள்


கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்கள் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை கல்லூரி வளாகத்திலும், அரசு பொது மருத்துவமனையிலும் நடத்தியது.



கோவைபுதூரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி புத்தாண்டு நிகழ்ச்சியினை வெறும் சிறப்பு சொற்பொழிவு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் மட்டும் இல்லாமல், வருகின்ற வருடத்தில் மாணவர்களின் தொழில், வேலை வாய்ப்பு, வாழ்க்கை திறன்களை பாடத்திட்டத்துடன் வகுப்பு நேரங்களில் செயல்படுத்த இதன் ஆசிரியர்கள் உறுதிமொழியெடுத்தனர்.



இதைத்தொடர்ந்து, கோவை குனியமுத்தூரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆடை வடிவமைப்புத் துறையின் மாணவர்கள் கடந்த எட்டு வருடங்களாக தாங்களே வடிவமைத்த ஆடைகள் மற்றும் துண்டுகளை கோவை அரசு பொது மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தன்று பிறந்த குழந்தைகளுக்கு மற்றும் அதற்கு முன்பு பிறந்த குழந்தைகளுக்கு வழங்கி புத்தாண்டை கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் முதல்வர் ஏ.இரமேஷ், பாபா ஞானகுமார், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...