ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி வீரத்தமிழர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


வீரத்தமிழர் முன்னணி சார்பில் ஜல்லிக்கட்டிற்கு தடையை நீக்கக்கோரியும், பீட்டா அமைப்பை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் இன்று காலை 11 மணி அளவில் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் வீரத்தமிழர் முன்னணி மண்டல பொறுப்பாளர் அருண் ரங்கராஜன் தலைமையில் நடைபெற்றது.



செய்தியாளர்களிடம் பேசிய அவர்:- தமிழ்நாட்டில் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டை தடைசெய்த உச்சநீதி மன்றத்தையும், தனி சட்டம் இயற்றி ஆவணம் செய்யாத மத்திய அரசை கண்டித்தும் வீரத்தமிழர் முன்னணி இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது.தமிழர்கள் 5 ஆயிரம் ஆண்டுகளாக ஏறுதழுவல் என்னும் இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்தி கொண்டிருக்கிறார்கள். அதை அமெரிக்காவை சேர்ந்த பீட்டா அமைப்பு வழக்கு தொடர்ந்து தடை செய்வது என்பது தமிழர்களின் பண்பாட்டின் இறையாண்மையை மீறும் செயல். 5 ஆண்டுகள் தமிழர்கள் நடத்தும் இந்த போட்டியை தொடர்ந்து 3 ஆண்டுகளாக மத்திய அரசு தடை செய்து வைத்திருக்கிறது. காவிரி உரிமை சிக்கலில் தமிழக அரசுக்கு எதிராக நடக்கும் மத்திய அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத மத்திய அரசு ஜல்லிக்கட்டிற்கு மட்டும் தடை விதிப்பது புறம்பானது. 

எனவே நாம் தமிழர் கட்சியும் வீரதமிழர் முன்னணி வருகின்ற தை மாதத்தில் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு போட்டியை உறுதியாக இந்த மண்ணில் நடத்திக்காட்டுவோம் என்றும் இந்த மண்ணில் எங்கள் காளைகள் ஓடும் என்பதை உறுதியளிக்கிறோம். இந்த ஜல்லிக்கட்டு தடைக்கு பின்பாக ஒரு சர்வதேச சாதி இருக்கிறது அதற்கு கூலியாகத்தான் பீட்டா அமைப்பு செயல்படுகிறது. இதனால் தான் மத்திய அரசும் தமிழகத்திற்கு ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு தடை விதித்துள்ளது. இந்த தடையை நாம் தமிழர் கட்சியும் வீரதமிழர் முன்னணி முறியடிப்போம் இவ்வாறு அவர் கூறினார். 





Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...